Lyricist Thamarai

நீராம்பல் பூவே நீராம்பல் பூவே பாடல் வரிகள்

நீராம்பல் பூவே நீராம்பல் பூவே மின்சாரல்
பட்டதாலே ஈரம் ஆனேனே

நெஞ்சத்தில் நீயே நச்சென்று தானே
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே

கால் கொண்ட மின்னல் கணுவில்லா கண்ணால்
காதோரம் கூந்தல் காற்றை ஆளை அள்ளாதோ

நிழலின்ற கண்கள் நீரில்லா மீன்கள்
தூண்டிலாய் தாமே மாறி என்னை கொல்லாதோ

ஏனோ தோணுது பெண்ணே
காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம் தானடி

ஜிடிகிடி பிஜிடி பாக் ஜிடிகிடி பிஜிடி பாக் யா
ஏனோ தோணுது பெண்ணே என் ஒரு வழிப் பாதையே
உன் இருவிழி தானடி யா யா யா

யார் அந்தப் பெண்ணோ யார் பெற்ற பெண்ணோ
அவளோடு சேர்ந்து போக இப்படி தவிக்கின்றாய்

அவள் மட்டும் தூங்கி என் தூக்கம் வாங்கி
எப்போதும் போலே வாழ்ந்தால் நியாயம் இல்லையே

நான் மட்டும் ஏங்கி என் வீட்டை நீங்கி
பின்னாலே வந்தால் என்ன செய்வாள் கள்ளியே

ஏனோ தோணுது பெண்ணே காற்றிலே கஸ்தூரி
உன் நறுமணம் தானடி யா யா யா
அந்த பிரம்மன் படைத்த அழகான பெண்ணோ

ஏனோ தோணுது பெண்ணே
என் ஒரு வழிப் பாதையே கம் ஆன் உன் இருவிழி தானடி
இவள் கண்கள் பாத்த போதும் மயக்கம் வருது டோய்

ஏனோ தோணுது பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம் தானடி
கொஞ்சம் கொஞ்சம் திரும்பி பாரு பொண்ணே
கொறஞ்சி போக மாட்ட

ஏனோ தோணுது பெண்ணே என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழி தானடி
யா யா யா எங்க போனாலும் என்ன இழுத்துட்டு போறியே…

Movie: Nannbenda
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj