Lyricist Vairamuthu

எனை மறுபடி மறுபடி பாடல் வரிகள்

எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ம்ம்ம்

அவள் என்னைப் பார்த்த கணம் என் காற்றில் எங்கும் மனம்
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்

அவள் பின்னே சென்றேன் தினம் நான் சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்

மீண்டும் மீண்டும் அவளின் பின்னே காதல் கேட்டு அலைந்தேன் நானே
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல் பார்வை ஒன்றில் சொன்னாளே

எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ஈர்த்தாள் } (2)
எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ஈர்த்தாள் } (2)

சொற்கள் கொண்டு காதல் சொன்னால் காதை
மூடிக் கொள்வாள் என்றே மௌனம் கொண்டு
சொன்னேனே ஓஹோ

பூக்கள் தந்து காதல் சொன்னால் தூக்கி வீசிப் போவாள்
என்றே குப்பை கூடை தந்தேனே

அவள் காலையிலே சென்ற சாலையிலே நான்
மாலை தேயும் போதும் ஏன் நின்றேன்
அவள் போலிருக்கும் சில மகளிரிடம் நான்
ஆசையோடு பேசியே ஏன் நின்றேன்

அவள் என்னை பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மனம் எங்கும் மனம்
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்

அவள் பின்னே சென்றேன் தினம் நான் சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்

எப்போதும் போல் தென்றல் இல்லை
எப்போதும் போல் சுவாசம் இல்லை
இன்றோ நேற்றைப் போல் இல்லை
ஓ எப்போதும் போல் பாடல் இல்லை
இப்போது அதில் அர்த்தம் கொள்ளை யாரும் விளக்கவில்லை

அவள் ஆடைகளில் உள்ள நிறம் தவிர
என் பூமி எங்கும் வண்ணம் ஏன் இல்லை
அவள் பார்வையிலே உள்ள ஒளி தவிர என் வானம்
எங்கும் ஜோதி ஏன் இல்லை

அவள் என்னை பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மனம் எங்கும் மனம்
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்

அவள் பின்னே சென்றேன் தினம்
நான் சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்

மீண்டும் மீண்டும் அவளின் பின்னே
காதல் கேட்டு அலைந்தேன் நானே
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்
பார்வை ஒன்றில் சொன்னாளே

எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ஈர்த்தாள்
எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ஈர்த்தாள்…

Movie: Nannbenda
Lyrics: Madhan Karky
Music: Harris Jayaraj