Lyricist Vairamuthu

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா பாடல் வரிகள்

கண்களோடு இரு கண்களோடு ஒரு காதல் பூத்ததடி பெண்ணே
காற்றிலாடி சிறு காற்றிலாடி ஒரு காடு பூத்ததடி கண்ணே
நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடி ஒரு நேசம் வந்ததடி பெண்ணே
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி உயிர் ஒன்றி விட்டதடி கண்ணே

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா

ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா

ஒருமுறை உன்னைக் காணும் பொழுது
இரு விழிகளில் ரோஜாக் கனவு
வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை

ஒருமுறை உன்னைக் காணும் பொழுது
இரு விழிகளில் ரோஜாக் கனவு
வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை

தங்கம் வெட்கப்பட்டால் மஞ்சள் வண்ணம் மாறும்
நாணம் கொண்டதாலே உன் வண்ணம்
பொன் வண்ணம் செவ்வண்ணம் ஆச்சு வா

கண்ணா நாம் கண்ணும் கண்ணும் கலப்போமா
காற்றோடு மேகத் துண்டாய் மிதப்போமா
அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா

துணியினை கொண்டு மார்பை மறைத்தாய்
துணிவினை கொண்டு மனதை மறைத்தாய்
நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்து விட்டாய்
காற்றோடு மொட்டை போல உடைந்து விட்டாய்

சிங்கம் கொண்ட பாலை வாங்கி வைப்பதென்றால்
தங்க கிண்ணம் வேண்டும் கண்ணாளா நான் தானே
உன் தங்கக் கிண்ணம் வா

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா

ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா
அன்பே என் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணா நம் காதல் கண்டு ம்ம்…

Movie: Nannbenda
Lyrics: Vairamuthu
Music: Harris Jayaraj