Movie: Needhikku Thalaivanangu (1976)
Music: M. S. Viswanathan
Lyricists: Pulamaipithan
Singers: S. Varalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் அதில் பட்டுத் துகிலுடன் அன்னைச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்

பெண்: இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் அதில் பட்டுத் துகிலுடன் அன்னைச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் யாராரோ வந்து பாராட்ட… நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் யாராரோ வந்து பாராட்ட…

பெண்: நின்று நிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும் நின்று நிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும் எழில் நீந்தும் உடலினைக் காணும் பொழுதினில் சிற்பம் அதைக் கேட்கும் நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட….

பெண்: இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் அதில் பட்டுத் துகிலுடன் அன்னைச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்

பெண்: என்னென்ன தேவை உன் உள்ளம் மகிழ்ந்திட என்பதைச் சொல்லிவிடு என்னென்ன தேவை உன் உள்ளம் மகிழ்ந்திட என்பதைச் சொல்லிவிடு என்றும் இல்லை எனும் சொல்லை நீ சொல்ல நானதைக் கேட்பதை மாற்றிவிடு நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

பெண்: நேருக்கு நேருன்னைப் பார்க்க வருபவர் நேருக்கு நேருன்னைப் பார்க்க வருபவர் நெஞ்சில் பயமிருக்கும் இங்கு நித்தம் தவழ்ந்திடும் காற்றும் உனைக்கண்டு கேட்டு வழி நடக்கும் நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

பெண்: இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் அதில் பட்டுத் துகிலுடன் அன்னைச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் யாராரோ வந்து பாராட்ட… நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் யாராரோ வந்து பாராட்ட…