Movie: Needhikku Thalaivanangu (1976)
Music: M.S. Viswanathan
Lyricists: Pulamaipithan
Singers: K.J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: { இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்

ஆண்: அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் } (2)

ஆண்: நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

ஆண்: { எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே } (2)

ஆண்: பின் நல்லவராவதும் தீயவராவதும் { அன்னை வளர்ப்பதிலே } (2)

ஆண்: நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

ஆண்: { தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர் போற்றும் புகழுரைகள் } (2)

ஆண்: நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை

ஆண்: கற்றவர் { கூறும் அறிவுரைகள் } (2)

ஆண்: இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்

ஆண்: அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்

ஆண்: { ஆறு கரை அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம் } (2)

ஆண்: தினம் நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில் { நாடும் நலம் பெறலாம் } (2)

ஆண்: நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

ஆண்: { பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை } (2)

ஆண்: நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர் { பேர் சொல்லி வாழ்வதில்லை } (2)

ஆண்: இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்

ஆண்: அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்

ஆண்: நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

ஆண்: ………….