Lyricist Kalaikumar

வானத்து நிலவெடுத்து பாடல் வரிகள்

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா

ஆனந்த கும்மி போடுது நெஞ்சம் ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்
அழகு பூங்கொடியே காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை

வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா

அம்பல வீட்டு தோட்டத்தில் நம் நெஞ்சம் சுற்றுவதென்ன
கண்ணாமூச்சி ஆட்டத்தில் பூக்கள் கை தட்டுவதென்ன

சிரிக்கின்ற மலருக்கு கவிதை சொல்லிக்கொடு
சிலிக்கின்ற இரவுக்கு கதவை அள்ளிக்கொடு

கன்னத்தில் கன்னத்தில் மீசை உரசுது
கண்ணுக்குள் கண்ணுக்குள் மின்னல் அடிக்குது

காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா

சித்திரை பெண்ணே வெட்கத்தை தூரத்தில் போக சொல்லு
கட்டளை இட்டு சொர்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு

இனிக்கின்ற இளமைக்கு சிறகை கட்டிவிடு 
மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்றுக்கொடு

என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது
அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது

காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா

ஆனந்த கும்மி போடுது நெஞ்சம் ஆசையில் கண்கள்
தேடுது தஞ்சம் அழகு பூங்கொடியே 
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை

வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா 
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா…

Movie: Simmarasi
Lyrics: Kalai Kumar
Music: S. A. Rajkumar

Leave a Reply