இந்த மாமனோட பாடல் வரிகள்
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
மாமனோட ஹே மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
அக்காளின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன்
மனசில் இப்ப அல்லாடி கிடக்கிற ஆசைய நான் முடிப்பேன்
விரும்பியது இந்நேரம் கிடைகிற போது
வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது
எல்லோர்க்கும் நினைத்தது போலே
மண வாழ்க்கை வாய்த்திடாது
எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்
இப்போது நான் அதை கண்டு பிடித்தேன்
கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட மாமனோட
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
மாமனோட இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன்
மணவறையில் கண்ணாலே உனக்கொரு
நன்றியை நானுரைபேன்
எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும்
விழி ஓரம் ஈரமாகும்
கல்யாண கனவுகள் யாவும் கையில் சேரும் நேரம் ஆகும்
பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும்
வண்டாட்டம் பறந்திடும் வஞ்சி மனதும்
மஞ்சத் தாலி மார்பில் ஊஞ்சலாட மாமனோட
ஹே மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை மாமனோட
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது…
Movie: Uthama Raasa
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja