Lyricist Vaali

எனக்கென பிறந்தவ பாடல் வரிகள்

எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா

ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா யம்மாடியோ
ஹோ ஓஒ ஹோ ஹோ….

உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்க மனசுக்கு பிடிச்சவ எவதான்

மாஞ்சிட்டு மேடை போட்ட மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட புதுதிட்டம் தீட்டினா

ஆளான காலம் தொட்டு உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்ட அனல் மூச்சு வாங்கினாள்
பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ இன்னும் என்னாச்சு

உச்சம் தலையில் வெச்ச மலரின் வெப்பம் உண்டாச்சு
மயங்காதே மாலை மாத்த மாமன் வந்தாச்சு

உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்

நீ சூட்டும் பூவுக்காக நெடுங்கூந்தல் ஆடுது
நீ வைத்த பொட்டுக்காக நடு நெத்தி வாடுது

ஆத்தாடி உன்னைத்தானே உயிர் நாடி தேடுது
காவேரி எங்கே போகும் கடலோடு கூடுது

அந்திப்பொழுதில் தென்னங்கிளையில் தென்றல் கூத்தாட
மையல் எழுதி மஞ்சக்குருவி கையை கோர்த்தாட

அடங்காது ஆசைக்கொண்டு நானும் போராட
உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்
ஹ ஹ அஹா என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான் ஹ ஹ அஹா

ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோ ஹோ ஹோ….

ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……
எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல இவளுக்கு இணைசொல்ல எவதான்…

Movie: Kizhakku Karai
Lyrics: Vaali
Music: Deva

Leave a Reply