Lyricist Vaali

செம்பருத்தி செம்பருத்தி பாடல் வரிகள்

கூப்பிட்டால் மலர் தேடி வண்டு வரும்
தேதி குறிபிட்டால் கொய்யாவை கிளிகள் கொத்தும்
சிந்தித்தால் வருகின்ற கவிதை போலே

கண்கள் சந்தித்தால் வர வேண்டும் உண்மைக் காதல்

செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி
காதலன தேடி வந்தால் கண்ணில் வண்ண மை எழுதி
மேலும் கீழும் ஆடுகின்ற நூல் இடை தான்

மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம் தான் நாள் எல்லாம் 
மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம் தான்
செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி

பள்ளியறை நான் தானே பாரிஜாத பூந்தேனே
கல்வி போல் காதலை கற்று தர வந்தேனே

கற்றுக் கொடு கண்ணாலே கன்னி மயில் உன்னாலே
என்னவோ என்னவோ இன்பங்களை கண்டாளே

பருவ கனவு பிறக்கும் பொழுது
இறகு முளைத்து பறக்கும் மனது

உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு
கரையை கடக்கும் நதிகள் இரண்டு

இமை தானே கண்ணை சேர்ந்தது
எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது
செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி

எப்பொழுதும் எந்நாளும் உன்னுடைய பூபாளம்
இல்லையேல் ஏங்குமே என்னுடைய ஆகாயம்

ஜன்னல் வழி நாள் தோறும் மின்னல் ஒன்று கை காட்டும்
அம்மம்மா என்னை தான் ஆசைகளில் நீராட்டும்

எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
இளமை தொடங்கி முதுமை வரைக்கும்

இரவும் பகலும் உறவை வளர்க்கும்
இடையில் இருக்கும் தடையை தகர்க்கும்

விலகாது சொந்தமானது தெய்வம் 
முடி போட்ட பந்தம் ஆனது

செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி
காதலனை தேடி வந்தாள் கண்ணில் வண்ண மை எழுதி

மார்பின் மீது கண் மயங்கி சாய்ந்திடத்தான்
மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான் 
கை தொடும்  மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான்
செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி…

Movie:  Vasanthakala Paravai
Lyrics: Vaali
Music: Deva

Leave a Reply