புலமைப்பித்தன்
Movie: Nermai (1985)
Music: M. S. Viswanathan
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela,

Added Date: Feb 11, 2022

 

இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்

ஆண்: எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள்

ஆண்: எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள் இது வீடல்ல நாடெல்லாம் கொண்டாடும் கோயில் ஆகாதோ

பெண்: இனி நாளெல்லாம் ஆனந்தம் தேன் சிந்தும் பாடல் கேட்காதோ

பெண்: என் தெய்வம் நீயே ஒளி தீபம் நீயே இந்நாளைப் போலே எந்நாளும் வாழ்க

அனைவரும்: எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள்

ஆண்: பிள்ளைகளே புது யுகம் எழுந்தது ஒளி மழை பொழிந்தது நனைவோம் இன்று பாடுங்களேன் இனி வரும் தலைமுறை அனைவரும் ஒருநிலை அடைவோம் என்று

பெண்: அன்புச் செல்வங்களே கொடியில் ஆடும் முல்லைகளே உங்கள் உள்ளங்களே என்றும் எங்கள் செல்வங்களே உன் சொந்தம் தேடி என் ஜென்மம் கோடி பொன் மாலை சூடி வரும் வானம்பாடி

அனைவரும்: எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள்

பெண்: யாதும் ஊரே இலக்கியம் சொன்னது இலக்கணம் ஆனது நேரில் கண்டேன் யாரும் இங்கே உறவெனும் நினைவிலே அன்பெனும் நதியிலே ஆடக் கண்டேன்

ஆண்: நாளும் இங்கே பணத்திலே மிதந்தவன் இருட்டிலே இருந்தவன் உலகைக் கண்டேன் நானும் இன்றே தலைவனின் மடியிலே குழந்தையாய் வளர்கிறேன் குருவைக் கண்டேன்

பெண்: உள்ளம் ஒன்றானது அன்பின் வெள்ளம் உண்டானது என்றும் மாறாதது அதிலே இன்பம் நூறானது

ஆண்: என் பிள்ளை நீயே கொடி முல்லை நீயே

பெண்: உன் பாசம் தானே நான் உண்ணும் தேனே

அனைவரும்: எத்தனை இனிய குடும்பம் முத்தமிழ் கவிதை அரங்கம் தொட்டது துலங்கும் கரங்கள் நல்லதை நினைக்கும் மனங்கள்