Lyricist Thamarai

விழியே விழியே திரை விரிகிறதே பாடல் வரிகள்

விழியே விழியே திரை விரிகிறதே
உன்னை பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே

கதிரவனாக திரிந்த பகல் நிலவென தேயவும் துணிந்ததடி
கருநிறமாக இருந்த நிழல் உனதொரு பார்வையில் வெளுத்ததடி

அன்பே உன்னை பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே
அன்பே உன்னை பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே

விழியே விழியே திரை விரிகிறதே
உன்னை பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே

எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகை கை ஏந்தி ரசிப்பேன்
எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகை கை ஏந்தி ரசிப்பேன்

அடம் நீ செய்தாலும் பொறுப்பேன்
உன் குரலை செல்போனில் பதித்தேன்
பொழுதும் உன்னோடு இருப்பேன்
உன் சிாிப்பில் சோம்பல்கள் முறிப்பேன்

எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

இலையும் தீண்டாத கனி நீ
நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ
விரல்கள் மீட்டாத இசை நீ மெல்லிசையாய் என் காதல் வசம் நீ

தவமே செய்யாத வரம் நீ பெண் கடலே முத்தங்கள் இடு நீ
இலையும் தீண்டாத கனி நீ நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ…

Movie: Idhu Kathirvelan Kadhal
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj