Lyricist Viveka

விழிகளில் விழிகளில் பாடல் வரிகள்

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் 
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் 
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்

யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே 
உன்பேரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன் 
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்

காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் 
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் 
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்

சாலையில் நீ போகையில மரமெல்லாம் 
கூடி முணுமுணுக்கும்
காலையில் உன்னை பார்ப்பதற்கு 
சூரியன் கிழக்கில் தவமிருக்கும் 
யாரடி நீ யாரடி அதிருதே என் ஆறடி

ஒரு கார்பன் தாள் என கண்ணை வைத்து
காதலை எழுதி விட்டாய்

அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்

போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்கமே 
நீ போனாலே நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் 
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் 
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்

பூவிலே செய்த சிலை அல்லவா 
பூமியே உனக்கு விலையல்லவா

தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வரமல்லவா

மேகமாய் அங்கு நீயடி தாகமாய் இங்கு நானடி
உன் பார்வை தூறலில் விழுந்தேன் அதனால்
காதலும் துளிர்த்ததடி

அந்த காதலை நானும் மறுநொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி

இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே
ஒரு பெண் கோழி நீ கூவித்தான் என் பொழுதும் விடிந்ததே

எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய் 
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் 
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்

யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே 
உன்பேரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன் 
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்

காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்…

Movie: Thiruvilaiyaadal Aarambam
Lyrics: Viveka
Music:  D. Imman

2 thoughts on “Vizhigalil Vizhigalil Song Lyrics in Tamil”

Leave a Reply