Lyricist Na. Muthukumar

கண்ணுக்குள் ஏதோ பாடல் வரிகள்

கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ 
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே

உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறி விட்டது
கண்ணே சொல் இது தான் காதல் என்பதா

கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ 
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

காதல் வந்து கெடுத்த பின் கவிதைகள் படிக்கிறேன்
தோழிகளை தவிர்கிறேன் உன்னை தேடி வருகிறேன்

தாய் தந்தை இருந்தும் ஏன் தனிமையில் தவிக்கிறேன்
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்

எந்தன் வீட்டு சொந்தம் என்று நேற்று வரை நினைத்தவள்
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்
உன்னை காதலித்த கணமே உனக்குள் வந்தேன்

கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ 
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்
கனவுகள் இங்கு இல்லை கண் விழித்து நினைக்கிறேன்

பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட 

அன்பே நானோ இருக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட
உண்மை காதலில் சாதல் இல்லையடி

கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ 
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே

உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறி விட்டது
கண்ணே சொல் இது தான் காதல் என்பதா

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹா ஆஆ ஆஆ ஆஆ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

Movie: Thiruvilaiyaadal Aarambam
Lyrics: Na. Muthukumar
Music:  D. Imman

Leave a Reply