Movie: Andhaman Kaidhi (1952)
Music: G. Govindarajulu Naidu
Lyricists: Ku. Sa. Krishnamoorthi
Singers: T. A. Mothi and P. Leela
Added Date: Feb 11, 2022
பெண்: ஹோ…ஓ. ஹோ ஓ ஓ ஓ ஓ.பாலு.
ஆண்: ஹோ.ஓ. ஹோ ஓ ஓ ஓ ஓ…லீலா…
பெண்: வண்ண மலர் தன்னைக் கண்டு இன்னிசைப் பண் பாடிக் கொண்டு தன்னை மறந்தே பொன் வண்டு என்ன சொல்லுது. வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு
ஆண்: கன்னி உந்தன் கண்ணைக் கண்டு தன் இனம் என்றே மருண்டு தன் நிலை மறந்தே வண்டு இசை பாடுது..ஹேய் கன்னி உந்தன் கண்ணைக் கண்டு வண்டு
பெண்: கான வேடன் போலே வந்து கண்ணி வைக்கப் பார்க்குறீர் கான வேடன் போலே வந்து கண்ணி வைக்கப் பார்க்குறீர்
ஆண்: மானென மருண்டோடும் பெண் மானே மானென மருண்டோடும் பெண் மானே உன்னை நான் விடேனே
பெண்: மானிதுவும் அல்லவே பூ மானே மயங்காதே வீணே மானிதுவும் அல்லவே பூ மானே
ஆண்: கோவை இதழ் தன்னைக் கண்டு ஆவல் மீறி வந்தே கோவை இதழ் தன்னைக் கண்டு ஆவல் மீறி வந்தே
பெண்: கொத்தித் தின்னப் பித்தம் கொண்டதேனோ கிளி போலவே கொத்தித் தின்னப் பித்தம் கொண்டதேனோ கிளி போலவே
ஆண்: கொஞ்சிக் கொஞ்சிப் பேசி எந்தன் நெஞ்சினைக் கவர்ந்த இன்ப வஞ்சியை மெய்க் காதல் தந்த வண்ணக் கிளியே கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் கிளியே
பெண்: முழு மதியும் முகிலும் போல் நாம் விளையாடுவோம் முழு மதியும் முகிலும் போல் நாம் விளையாடுவோம்
ஆண்: விழி மணியும் இமையும் போலே உறவாடுவோம் விழி மணியும் இமையும் போலே உறவாடுவோம்
பெண்: ஆருயிரே.ஏ.ஏ.
பெண்: ஆரமுதே.ஏ.ஏ.
ஆண்: ஆரமுதெனவே காதல் இன்பம் காணுவோம் ஆரமுதெனவே காதல் இன்பம் காணுவோம்
பெண்: அன்பில் இணைந்தொன்றாய் வாழுவோம்
இருவர்: நாமே அன்பில் இணைந்தொன்றாய் வாழுவோம்
இருவர்: வண்ணமலர் தன்னைக் கண்டு இன்னிசைப் பண் பாடிக் கொண்டு தன்னை மறந்தே பொன் வண்டு காதல் பேசுது வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு