Lyricist Vairamuthu

வா வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா பாடல் வரிகள்

வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா
வா வா என் தலைவா தலையணையை பங்கிடவா

மல்லிகையின் மடலுக்குள்ளே மர்ம கதைதான் இருக்கு
மர்மக்கதை படிப்பதற்கு இருட்டுக்குள்ளும் வழி இருக்கு

பூவே உன் கதவுகள் எல்லாம் பூட்டிதான் கிடக்கு
பத்து விரல் சாவி எல்லாம் என் வசம் இருக்கு

வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா

நெஞ்சில் ஒரு துளி இடமில்லையா
நீயே வழங்கிட மனமில்லையா
வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா
உரிமை எனக்கில்லையா

காகித பூமி நான் இல்லையா தருகிற மேகம் நீ இல்லையா
பூமியின் மர்மங்கள் நனைத்திடையா பூக்கள் மலர்திடையா

அழகின் மொத்தம் நான் அணைக்க
ஆயிரம் கைகள் வேண்டுமடி தலைவி
சூரிய தாகம் தீரும் வழி சுந்தர பானம் அள்ளி குடி தலைவா

கூடலிலே பெண்ணின் கண்கள் மூடியே கிடக்கு
கோடுகளை தாண்டும் செய்கை சம்மதம் அதற்கு

காற்றில் ஒலிகள் மிதக்கும் வரை கடலில் ஒரு துளி இருக்கும் வரை
காலத்தின் கடை நொடி கரையும் வரை கண்ணா கலந்திருப்போம்

சுற்றும் உலகம் நிற்கும் வரை சூரிய குமுழி உடையும் வரை
வானம் வயதாகி உதிரும் வரை கண்ண இணைந்திருப்போம்

உதடுகள் கொண்டு வெட்கம் துடைத்து
உயிரே என்னை வழி நடத்து தலைவா
எதில் எதில் சுகம் என்று அறிவுறுத்து
அதில் அதில் கொண்டு என்னை நிலைநிறுத்து தலைவி

கட்டில் மீது விளக்கின் கண்கள் மூடுதல் எதற்கு
இல்வழக்கில் சாட்சி இல்லை என்று செய்வதற்கு

வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா வா வா
என் தலைவா தலையணையை பங்கிடவா

மல்லிகையின் மடலுக்குள்ளே மர்ம கதைதான் இருக்கு
மர்மக்கதை படிப்பதற்கு இருட்டுக்குள்ளும் வழி இருக்கு

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்…

Movie: Sandhitha Velai
Lyrics: Vairamuthu
Music: Deva