Lyricist Snehan

உசுருக்குள் உன் பேர பாடல் வரிகள்

உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன்

உன்மேல மட்டும்தான் ஆச வெச்சேன்
என்கிட்டே என்ன நான் பேச வெச்சேன்

உன் பார்வை பட்ட நேரம் நான் வேர் அறுந்து போனேன்
உன் வேர்வ பட்டதால ஊர் அறுந்து போனேனே

உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் ஹோ

நீ எனக்கு போதும் நான் நெறஞ்சு வழியுறேன்
பூமி பந்த போல நான் தான சொழலுறேன்

நத்த கூட்ட போல நான் உனக்குள் அடங்குறேன்
சத்தமின்றி உன்ன நான் முழுசா முழுங்குறேன்

குலசாமி  போலத்தான் என் முன்னால நிக்குற 
மரங்கொத்தி போலத்தான் என்ன நீ கொத்துற

ஒரு கோழி குஞ்ச போல என்ன பொத்தி வைக்கு
இந்த பாவி நெஞ்சுக்குள்ள சிறுவாட சேக்குற

வெள்ளந்தி பாசத்த வெல பேச யாருமில்லை

உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன்

உள்ளங்கை ரேகை உன் பேர சொல்லுதே
உள்ளுக்குள்ள வெக்கம் என்னை குத்தி கொல்லுதே

உள்ளங்காலு நிழலா என்ன ஒட்ட வெச்சுட்ட
உசுர மட்டும் பிச்சு நீ வெளிய நட்டுட்ட

ஆகாயம் போல நீ எங்கேயும் நிக்குற
அப்பப்போ என்ன நீ பூ பூக்க வைக்குற

அடி நீயும் நானும் வாழ ஒரு கோவில் கட்டுவேன்
உன்ன யாரு தீண்டினாலும் நான் நின்னு வெட்டுவேன்

என் சாமி நீதான்டா உன்ன விட்டு போகமாட்டேன்

உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன்

உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் ஹோ…

Movie: Ettuthikkum Para
Lyrics: Snehan
Music: M.S.Sreekanth

Leave a Reply