Lyricist Na. Muthukumar

துளி துளி துளி மழையாய் பாடல் வரிகள்

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பாா்த்தால் பாா்க்க தோன்றும்

பேரை கேட்க தோன்றும் பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்

செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூ முகம்
காணவே ஆயுள் தான் போதுமோ காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது

நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும் பாா்வை ஆளை தூக்கும்
கன்னம் பாா்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டு பாா்க்கும் போது கொலுசாய் மாற தோன்றும்

அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா

சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே
ஏங்குவேன் தோள்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்

காணும்போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள் உயிரை ஏதோ செய்தாள்
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள் கனவில் கூச்சல் போட்டாள்

அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே…

Movie: Paiyaa
Lyrics: Na. Muthu Kumar
Music: Yuvan Shankar Raja