Lyricist Na. Muthukumar

பூங்காற்றே பூங்காற்றே பாடல் வரிகள்

பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட வாசம்
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் தேசம்

என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சி பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்

இந்த நிமிடங்கள் புன்னகையை கூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணை பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னில் ஒரு வார்த்தை பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்

வழிபோக்கன் போனாலும் வழியில் காலடி தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்

பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்

அழகான நதி பார்த்தால் அதன் பெயரினை கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்ன பேரோ
நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்

ஏதேதோ ஊர் தாண்டி ஏராளம் பேர் தாண்டி
போகின்றேன் போகின்றேன்

நில்லென்று சொல்கின்ற நெடுங்சாலை விளக்காக அலைகின்றேன் எரிகின்றேன்
மொழி தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழி துணையாய் நீ வந்தாய் போகும் தூரம் குறைகிறதே

என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட வாசம்
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் தேசம்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்…

Movie: Paiyaa
Lyrics: Na. Muthu Kumar
Music: Yuvan Shankar Raja