Lyricist Pa.Vijay

தந்தன தந்தன தை மாசம் பாடல் வரிகள்

இரு விழி இரு விழி இமை கொட்டி அழைக்குது 
உயிர் தட்டி திறக்குது ரெக்கை கட்டி பறக்குதம்மா

இரு மனம் இரு மனம் விட்டு விட்டு துடிக்குது
விண்ணை தொட்டு மிதக்குது
வெட்கம் விட்டு இணைந்ததம்மா

தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்
சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான்

என்னது என்னது இந்த நாணம் 
மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்
தொட்டது தொட்டது இப்ப போதும் 
அட மத்தது மத்தது எப்பதான்

ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி
அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி

தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்
சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான்

ஆண் யாரோ பெண் யாரோ தெரிய வேண்டுமா நீ சொல்
யார் மீது யார் யாரோ புரிய வேண்டுமா நீ சொல்

என் காது ரெண்டும் கூச வாய் சொன்னதென்ன நீ சொல்
அந்த நேரம் என்ன பேச அறியாது போலே நீ சொல்

ஒரு பூவும் அறியாமல் தேன் திருடிய ரகசியம் நீயே சொல்
இனி என்ன நான் செய்ய இதழோரம் சொல்வாயா

இடைவேளை நீ தந்து இமை தூங்க செல்வாயா
தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்
சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான்

ஆகாயம் போதாதே உனது புகழையும் தீட்ட
அன்பே உன் கண் போதும் எனது உயிரையும் பூட்ட
உன் கண்களோடு நானும் முகம் பார்த்து வாழ வேண்டும்

உன்னை பார்த்து பார்த்து வாழ நக கண்ணில் பார்வை வேண்டும்
உன் கையில் உயிர் வாழ்ந்தேன் இது தவமா வரமா புரியவில்லை

உன்னோடு என் சொந்தம் ஈர் ஏழு ஜென்மங்கள்
உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சொர்கங்கள்

தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்
சந்தன சந்தன மல்லி வாசம் தேன்  சிந்துது சிந்துது இப்ப தான்

என்னது என்னது இந்த நாணம்  
மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்
தொட்டது தொட்டது இப்ப போதும் அட மத்தது மத்தது எப்பதான்

ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி 
அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி…

Movie: Thavasi
Lyrics: Pa. Vijay
Music: Vidyasagar

Leave a Reply