Lyricist Vairamuthu

தாயாரும் அறியாமல் பாடல் வரிகள்

ஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஹா ஆஆ ஆஆ

தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று மலரும்
என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்
பெண்நெஞ்சில் பேர் அச்சம் பரவும்

பயம் போக சீராற்றி பாலூற்றி நீராட்டி திருமேனி மருதாணி இடுக
உளுந்தாலே கலி செய்து வெல்லங்கள் தானிட்டு
நல்லெண்ணெய் தான் விட்டு தருக

பொண்ணோடு சீர் கொண்டு வருக
இந்த பூவுக்கு புது சேலை புனைக
பொண்ணோடு சீர் கொண்டு வருக
இந்த பூவுக்கு புது சேலை புனைக

இயற்கை தரும் பூப்போடு இன்னுமொரு பூப்பெய்தி
வண்ண மலர் குளம் வாழ வாழ்க வாழ்க

தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று மலரும்
என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்
பெண்நெஞ்சில் பேர் அச்சம் பரவும் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ…

Movie: Thithikudhe
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar