தாயாரும் அறியாமல் பாடல் வரிகள்
ஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஹா ஆஆ ஆஆ
தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று மலரும்
என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்
பெண்நெஞ்சில் பேர் அச்சம் பரவும்
பயம் போக சீராற்றி பாலூற்றி நீராட்டி திருமேனி மருதாணி இடுக
உளுந்தாலே கலி செய்து வெல்லங்கள் தானிட்டு
நல்லெண்ணெய் தான் விட்டு தருக
பொண்ணோடு சீர் கொண்டு வருக
இந்த பூவுக்கு புது சேலை புனைக
பொண்ணோடு சீர் கொண்டு வருக
இந்த பூவுக்கு புது சேலை புனைக
இயற்கை தரும் பூப்போடு இன்னுமொரு பூப்பெய்தி
வண்ண மலர் குளம் வாழ வாழ்க வாழ்க
தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று மலரும்
என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்
பெண்நெஞ்சில் பேர் அச்சம் பரவும் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ…
Movie: Thithikudhe
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar