Movie: Athisaya Penn (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Subbu Arumugam
Singers: T. M. Soundararajan
Added Date: Feb 11, 2022
ஆண்: பாரினில் ஆதியில் பேதமே இல்லை பாதியில் வந்ததே தொல்லை ஏருழுவோன் பேருக்கே பூமி என்று எழுதிடுவோம் சாசனமே சாசனமே…ஏ..ஏ..ஏ
ஆண்: ஹே..
ஆண்: சில பேர் வாழ பல பேர் உழைக்கும் நிலைமையும் சரிதானோ மனித நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ..
ஆண்: கண்ணீர் சிந்தும் பாட்டாளி ரத்தம் பன்னீராவது முறையோ
குழு: ஏழையின் நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ.. இந்த நிலைமையும் சரிதானோ..
ஆண்: வானிலே பறவைகள் இனமே உரிமையாகவே பறந்திடும் அழகினைப் பார் மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார் மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார் அடிமை நிலையில் மனிதனைப் பார்
குழு: அடிமை நிலையில் மனிதனைப் பார்
ஆண்: ஏழையின் வாழ்வே செல்வரின் கையில் இனித்திடும் தின்பண்டமாச்சு….
ஆண் மற்றும்
குழு: ஏழையின் நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ..
குழு: சில பேர் வாழ பல பேர் உழைக்கும் நிலைமையும் சரிதானோ மனித நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ.. இந்த நிலைமையும் சரிதானோ..
ஆண்: உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம் ஓ…ஓஒ…ஓ…ஓஹ்..ஏ.ஏ….ஏ…ஏ…ஏஹ் ஹே…
ஆண்: உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம் எல்லோரும் சமமே ஹே எல்லோரும் சமமே நாட்டில் யாவுமே பொதுச் செல்வம் என்றிடுவோம்
குழு: நாட்டின் செல்வம் என்றிடுவோம்
ஆண்: எளியோன் துயரை வலியோன் உணரா இழிநிலை உலகினில் ஏனோ.
ஆண் மற்றும்
குழு: ஏழையின் நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ..