Movie: Koyil Puraa (1981)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தானனா…தானனனா… தனனனதானானா. தனனனா தனனனா… தானனனா…னனனா..ஆ…ஆ…ஆ..

பெண்: சங்கீதமே.. சங்கீதமே…ஏ…ஏ..என் தெய்வமே நிம்மதி வானம் விடிந்திடும் நேரம் நிம்மதி வானம் விடிந்திடும் நேரம் ஓடி வந்தேன் உன்னை நான் பாட

பெண்: சங்கீதமே…ஏ…ஏ..என் தெய்வமே

பெண்: மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள் மனதினில் ஆயிரம் இன்பம் மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள் மனதினில் ஆயிரம் இன்பம்

பெண்: பார்த்தது பொய்யாக பழங்கதை என்றாக எனக்கின்று ஏனிந்த துன்பம் எனக்கின்று ஏனிந்த துன்பம்

பெண்: அந்த தமிழிசை கேட்டு இள நெஞ்சில் எழுந்தது பாட்டு அந்த கவிதைகள் எங்கே என் ஆசை கனவுகள் எங்கே அது வருமோ சுகம் தருமோ இனி ஒரு முறை உயிரும் துணை வருமோ இனி அதுவரை ஆதாரமென நான் தேடியது ஆகாததென ஏன் ஆகியது

பெண்: நிலவிலும் எனதுடல் அனுதினம் முழுவதும் தண்ணீரில் ஆறாது கண்ணீரும் மாறாது

பெண்: இனிய சங்கீதமே…ஏ…ஏ.. என் தெய்வமே

பெண்: ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல் தவித்தது பெண் மனம் ஒன்று

பெண்: ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல் தவித்தது பெண் மனம் ஒன்று

பெண்: நாயனம் காதோடு தரிசனம் கண்ணோடு கிடைத்தது நிம்மதி இன்று கிடைத்தது நிம்மதி இன்று

பெண்: வெள்ளம் தமிழிசை வெள்ளம் அதில் துள்ளும் உருகிய உள்ளம்

பெண்: கல்லும் கனியென ஆகும் ஒரு முள்ளும் மலரென மாறும் உனை மறவேன் தினம் வருவேன் இசை மழையில் நனைவேன் கவி புனைவேன் இனி உலகினில்

பெண்: ஆனந்தலய நாதங்களுடன் நீ தந்த இசை பேரின்ப சுகம்

பெண்: ஒரு முறை மறுமுறை பெறுவதில் தவறேது ஒன்றான உள்ளங்கள் என்றென்றும் சந்திக்க அழைக்கும்…சங்கீதமே..என் தெய்வமே.. நிம்மதி வானம் விடிந்திடும் நேரம் ஓடி வந்தேன் உன்னை நான் பாட

பெண்: சங்கீதமே.. சங்கீதமே… சங்கீதமே…