Lyricist Palani Bharathi

புண்ணியம் தேடி காசிக்கு பாடல் வரிகள்

புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே

புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே

பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம் எல்லாரும் அறிவார்
இந்த பாவப் பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யார் அறிவார்

தெய்வத்தைத் தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனைத் தேடி தெய்வமே வந்ததடி…

புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே

நேற்று வரை சூரியனை நெஞ்சில் கற்பனை செய்தேன்
அது ஏதோ என்று எண்ணிக் கொண்டேன்
இன்று வந்த சூரியனை ஏழைக் குடிசையில் கண்டேன்
எந்தன் ஏழிசையை அள்ளித் தந்தேன்

ராகத்தின் கோயிலில் நாதத்தின் தேவனே
வேதத்தை ஓதுவேன் வேதனை தீரவே
கண்ணீரிலே உப்பு இன்று தித்திக்குதே
கண்டுக்கொண்டேன் மாற்றங்களை தந்தது நீதானே

புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே

எப்பொழுது எப்பொழுது உந்தன் முகத்தினை பார்ப்பேன்
அதில் எந்தன் முகத்தினை பார்ப்பேன்…

என்ன செய்து என்ன செய்து இந்தக் கடன் நான் தீர்ப்பேன்
பட்ட நன்றிக் கடன்களை தீர்ப்பேன்

எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் போதாது
சத்தியம் பாட்டிலே சொன்னாலும் தீராது
கண்கள் இல்லை பார்வை உண்டு கண்டுக்கொண்டேன்
ஊமை நெஞ்சம் பேசுகின்ற வார்த்தையைக் கேட்டேனே..

புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே

பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம் எல்லாரும் அறிவார்
இந்த பாவப் பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யார் அறிவார்

தெய்வத்தைத் தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனைத் தேடி தெய்வமே வந்ததடி

புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே…

Movie: Kasi
Lyrics: Pazhani Bharathi
Music: Ilaiyaraaja