Lyricist Pulamaipithan

ஆத்தோரத்திலே ஆலமரம் பாடல் வரிகள்

ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே

ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே

ஆடும் நெஞ்சில் ஆடும் சின்னக் கண்ணம்மா கண்ணம்மா
ஆடி வெள்ளம் போலப் பொங்கி பாடலாமா
கூடு கட்டி நெஞ்சில் வாழும் பொன்னம்மா பொன்னம்மா

கொஞ்சிக் கொஞ்சி கொஞ்சம் வந்து பேசலாமா
ஒன்னத் தானே பாட்டில் வெச்சேன்
நெஞ்சுக்குள்ள பூட்டி வெச்சேன்

ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே 

வெள்ளி கொலுசு ரெண்டு துள்ளி குலுங்க உந்தன்
காலடியின் ஓச மட்டும் கேட்க்கும்
நெஞ்சில் வரைஞ்சு வெச்ச உந்தன் அழகைக் கண்ணில்
பார்த்திருக்க ஆசை எல்லாம் தீரும்

வானின் வடிவம் என்ன மண்ணின் வனப்பும் என்ன
நீ கொடுத்த கண்ணைக் கொண்டு பார்ப்பேன்
காடு மலைகள் எங்கும் ஓடி குதிச்சு வந்து
ஓய்வெடுக்க உன் மடியை கேட்பேன்

என் வானிலே நான் பார்க்கும் பொன் வசந்தக் காலம்
நீ தானம்மா நான் பாடும் என் உயிரின் ராகம்
கண்மணியின் பாவை என கண்ணுக்குள்ளே வந்தவளே
உன்னத் தானே பாட்டில் வெச்சேன்
நெஞ்சுக்குள்ளே பூட்டி வெச்சேன்

ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே

ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே 

கண்கள் இரண்டு அதில் ஒண்ண எனக்குத் தந்த
உன் கடன எப்படி நான் தீர்ப்பேன்
ரெண்டு குரல் இருந்தா ஒண்ன உனக்குத் தந்து
நானும் உன்னப் பாடச் சொல்லி கேட்பேன்

வெள்ளி நிலவில் கூட உள்ள களங்கம் பத்தி
ஊரு சொல்லக் கேட்டதுண்டு மானே
கள்ளம் கபடம் ஏதும் இல்லா குழந்தை என்று
துள்ளி வந்த கொல்லி மலைத் தேனே

நேற்று வரைக்கும் நான் பார்த்த கற்பனைகள் யாவும்
உண்மை எனவே நான் காண கண்ணில் வந்த ஒளியே
கண்மணியின் பாவை என கண்ணுக்குள்ளே வந்தவளே
உன்னத் தானே பாட்டில் வெச்சேன்
நெஞ்சுக்குள்ளே பூட்டி வெச்சேன்

ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே

ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே

ஆடும் நெஞ்சில் ஆடும் சின்னக் கண்ணம்மா கண்ணம்மா
ஆடி வெள்ளம் போலப் பொங்கி பாடலாமா
கூடு கட்டி நெஞ்சில் வாழும் பொன்னம்மா பொன்னம்மா

கொஞ்சிக் கொஞ்சி கொஞ்சம் வந்து பேசலாமா
ஒன்னத் தானே பாட்டில் வெச்சேன்
நெஞ்சுக்குள்ள பூட்டி வெச்சேன்

ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும்
ஸ்வர்ணக்குயிலே…

Movie: Kasi
Lyrics: Pulamaipithan
Music: Ilaiyaraaja

 

Leave a Reply