Punnai Vana Poonguyile Song Lyrics

Movie: Sevvanthi (1994)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Arunmozhi and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ..ஆஹ்…ஆஹ்..ஆஅ… ஆ..ஆஹ்…ஆஹ்..ஆஅ…ஆ…ஆ. ஆ..ஆஹ்…ஆஹ்..ஆ…

ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பூப் பூக்கும் பொழுதாச்சு பூ விழியும் பூத்தாச்சு அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே கனவானதே பல கனவானதே

ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

ஆண்: என்னோடு பேசும் இளம் தென்றல் கூட என் கேள்விக்கென்று பதில் கூறுது சொன்னாலே புரியும் உன் கண்ணின் மொழியும் முன்னாலே வந்து பதில் கூறு நீ

பெண்: என் கண்கள் சொல்லும்..ம்ம்…ஹா. என் கண்கள் சொல்லும் மொழி காதலே என்றென்றும் செல்லும் விலகாமலே தனியாக நின்றாலும் உன் தாகமே துணையாக வந்தாலும் தணியாதது.

ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

பெண்: அகல் என்னும் தீபம் அணையாமல் வீசும் அழகாக ஆடும் மறுத்தென்ன பேசும் தூண்டாத விளக்கு நாம் கொண்ட காதல் ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்

ஆண்: அலை ஓய்ந்து போகும்….ம்ம்…ஹோய் அலை ஓய்ந்து போகும் கடல் மீதிலே நிலையான காதல் ஓயாதம்மா ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலுமே என்னோடு நீ தானே என் ஜீவனே..

ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
பெண்: பூப் பூக்கும் பொழுதாச்சு பூ விழியும் பூத்தாச்சு அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே கனவானதே பல கனவானதே

ஆண்: புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா…ஆ…