Ethanai Per Unnai Nambi Song Lyrics

Movie: Sirayil Pootha Chinna Malar (1990)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: எத்தனை பேர் உன்னை நம்பி ராசா தினம் எண்ணி எண்ணி கண் திறந்தோம் ராசா

பெண்: எத்தனை பேர் உன்னை நம்பி ராசா தினம் எண்ணி எண்ணி கண் திறந்தோம் ராசா எந்நாளும் பண்பாடு தன்மானம் நீ இங்கு வாராமல் என்னாகும்

பெண்: ஏ உன் மூச்சு உன் பேச்சு எந்தன் வாழ்விலே எந்நாளும் உன் ஆட்சி எங்கள் நெஞ்சிலே தலைவா நீ வர வேண்டும் ஒரு நியாயம் தர வேண்டும்.. தலைவா நீ வர வேண்டும் ஒரு நியாயம் தர வேண்டும்..

பெண்: பகை தன்னை முடித்திடவே துயர் தன்னை அழித்திடவே நிமிர்ந்து எழுந்து வருக வருக அழகிய திருமகனே

பெண்: தடைகள் உடைத்திடவே படை தன்னை ஜெயித்திடவே விரைந்து எழுந்து வருக வருக இளமையின் தலை மகனே

பெண்: பெண் மனம் தவித்தால் கண்ணீரிலே தீயோரை அழிப்பாய் செந்நீரிலே என் கோவிலே என் தெய்வமே நீ வந்து காட்சி கொடு தீமை இங்கே நீயும் எங்கே ஏழைக்கு வாழ்வு கொடு.

பெண்: எத்தனை பேர் உன்னை நம்பி ராசா தினம் எண்ணி எண்ணி கண் திறந்தோம் ராசா

பெண்: நரி ஒன்று சிரிக்கிறதே வலை ஒன்றை விரிக்கிறதே இனிமை கொடியில் இருக்கும் கனியை பறித்திட நினைக்கிறதே

பெண்: புலி ஒன்று பதுங்கிடுதே புயல் இங்கு தொடர்ந்திடுதே கொடுமை பிடியில் நிறுத்தி மலரை பறித்திட நினைக்கிறதே

பெண்: நல்லோர்கள் துடித்தால் என்னாவது இல்லாதோர் தவித்தால் பொல்லாதது என் கோவிலே என் தெய்வமே நீ வந்து காட்சி கொடு தீமை இங்கே நீயும் எங்கே ஏழைக்கு வாழ்வு கொடு..

பெண்: {எத்தனை பேர் உன்னை நம்பி ராசா தினம் எண்ணி எண்ணி கண் திறந்தோம் ராசா} (2) எந்நாளும் பண்பாடு தன்மானம் நீ இங்கு வாராமல் என்னாகும்

பெண்: ஏ உன் மூச்சு உன் பேச்சு எந்தன் வாழ்விலே எந்நாளும் உன் ஆட்சி எங்கள் நெஞ்சிலே தலைவா நீ வர வேண்டும் ஒரு நியாயம் தர வேண்டும்.. தலைவா நீ வர வேண்டும் ஒரு நியாயம் தர வேண்டும்..

பெண்: {எத்தனை பேர் உன்னை நம்பி ராசா தினம் எண்ணி எண்ணி கண் திறந்தோம் ராசா} (2)