Asai Anna Arumai Thambi cover

Movie: Asai Anna Arumai Thambi (1955)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: K. Devanarayanan and Kumari Udutha

Added Date: Feb 11, 2022

பெண்: பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின் பந்தலிலே பல பேர்கள் முன்னாலே பரிவுடன் என்னை கல்யாணம் பண்ணாமலே பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின்

ஆண்: சரியா நியாயமா உன் வார்த்தை முறையா எண்ணிப் பாரம்மா மருமகள் தனைத் தேட என் தந்தை இருந்திடும்போது கல்யாணம் நான் செய்வது சரியா நியாயமா உன் வார்த்தை முறையா எண்ணிப் பாரம்மா

பெண்: சாகசம் இது தகாது தந்தையிடம் கேளாமல் என் மீது காதலே கொண்டதேன் காதலே கொண்டதேன் கல்யாணம் என்றால் ஏதேதோ பொய் சொல்வதேன் பயந்தால் ஆகுமா…

ஆண்: காதல் கொள்ள தந்தை சொல்லும் கருத்தும் தேவையா இதை நீ அறியாப் பாவையா இதை நீ அறியாப் பாவையா

ஆண்: காதல் கொள்ள தந்தை சொல்லும் கருத்தும் தேவையா இதை நீ அறியாப் பாவையா இதை நீ அறியாப் பாவையா..ஓஒ..ஓ… சரியா நியாயமா உன் வார்த்தை முறையா

பெண்: போதும் ஐயா டாக்டரே புரிந்தது உமது எண்ணமே போதும் ஐயா டாக்டரே புரிந்தது உமது எண்ணமே

ஆண்: வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே என்னை வாயாடியே.. வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே என்னை வாயாடியே..
பெண்: தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது

ஆண்: சந்தோஷமாய்..
பெண்: வாழவே…
ஆண்: சந்தோஷமாய்..
பெண்: வாழவே…
ஆண்: தந்தையைக் கேட்டே கல்யாணம் நான் செய்குவேன்

இருவர்: பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின்…. பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின்….