Lyricist Thamarai

பார்த்த முதல் நாளே பாடல் வரிகள்

பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே 
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே 
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய் 
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய் 
என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம் என்றும் மறையாதே

காட்டிக் கொடுக்கிறதே கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே 

உன் விழியில் வழியும் பிரியங்களை 
பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை 

உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் 
நானும் மழை ஆனேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி 
காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே

என்னைப் பற்றி எனக்கே தெரியாத பலவும் 
நீ அறிந்து நடப்பதை வியப்பேன் உனை ஏதும் கேட்காமல் 
உனதாசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்

போகின்றேன் என நீ பல நூறு முறைகள் 
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் 
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

காட்டிக் கொடுக்கிறதே கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய் 
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் 
நானும் மழை ஆனேன்

உன்னைமறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் 
தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன் 
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் 
காட்சி கனவாக வந்ததென்று நினைத்தேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில் 
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை 
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

கண் பார்த்து கதைக்க முடியாமல் 
நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் 
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே 
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே 
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய் 
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய் 
என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம் என்றும் மறையாதே…

Movie: Vettaiyaadu Vilaiyaadu
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj 

 

Leave a Reply