Movie: Deiva Vaakku (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam
Added Date: Feb 11, 2022
ஆண்: நான் பெத்தெடுத்திடாத முத்து மணித் தேரே நான் தத்தெடுத்திடாத தங்கமணிச் சீரே ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருந்தும் சொல்லவில்லையே அடி கண்ணே தூங்காதே சிறு பெண்ணே கலங்காதே
ஆண்: ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன் ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்
ஆண்: அடி ஆத்தாடி ஒன்ன நெனச்சேன் ஒரு அன்பாலே மெட்டு படிச்சேன்
ஆண்: உன் சோகம் பறக்க என் பாட்டு விருந்து அத கேட்டு மறந்தா என் பாட்டு மருந்து
ஆண்: நீ கூட இருந்தா அது போதும் எனக்கு வாடி இருந்தா துன்பம் எனக்கு.
ஆண்: ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன் ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்
ஆண்: நான் ஆதாரம் இல்லா. அந்தரத்து வானம். என் நாவோடு சேரும்.. நாட்டுப்புற கானம்..
ஆண்: என் சொந்தக் கதைய சொல்லிப் படிக்க சந்தமில்லையே அத சொன்னா ஆறாது என் சொந்தம் மாறாது
ஆண்: நான் தாயாரப் பாத்ததும் உண்டு ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல தெனம் பாலூட்டி என்ன வளத்த பரிவான சொந்தமும் இல்ல
ஆண்: இந்த ஊரு முழுக்க என் பந்த ஜனங்க உண்மை இருக்கும் வெள்ளை மனங்க ஒரு காவல் இருக்கு என் கை வணங்க நான் கானம் படிச்சேன் கண்ண தொறக்க..
ஆண்: நான் தாயாரப் பாத்ததும் உண்டு ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல
ஆண்: ஒரு ஈ எறும்பு கடிச்சாலும் தாய் மனசு நோகும் நீ பாய் விரிச்சு படுத்தாலே இப்ப என்ன ஆகும்
ஆண்: ஒன்ன அள்ளி எடுத்து ஊட்டி வளத்து காத்துக் கிடந்தா அந்த தாயோட மொகம் பாரு கண்ணு ஒரு நாளும் ஒறங்காது
ஆண்: நான் பாடாத பாட்டுகள் இல்ல அத கேட்காத ஆட்களும் இல்ல நான் நாவாரப் பாடி அழைச்சா வந்து பாக்காத பார்வையும் இல்ல
ஆண்: என் தாயி கொடுத்த ஒரு சக்தி இருக்கு உன்ன தட்டி எழுப்ப புத்தி இருக்கு உன்ன தாவி அணைக்க ஒரு நேரம் இருக்கு அந்த நேரம் வரைக்கும் பாரம் எனக்கு..
ஆண்: நான் பாடாத பாட்டுகள் இல்ல அத கேட்காத ஆட்களும் இல்ல