Lyricist Kabilan

நானாக நான் இருந்தேன் பாடல் வரிகள்

லையோ லையோ லையோ லையோ லையோ லையோ லையோலோ
லையோ லையோ லையோ லையோ லையோ லையோ லையோலோ

நானாக நான் இருந்தேன் நீ வந்தாய் நீயானேன்
நானாக நான் இருந்தேன் நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே… ஏ…
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே… ஏ…

கொட்டாங்க் குச்சிக்குள்ளே ரெண்டு பட்டாம்பூச்சி நான்தானே
நூலை தொட்டு காலை உரசும் சோலையாக மூடவந்தேன்

சின்ன சின்ன பூக்கள் நான் மலர்மாலை நீ
நான் கண்கள் திறந்து பார்க்கின்ற அதிகாலை நீ

ஆலமரம் போலவே இருந்தேனடி
ஒரு வாழை மரம் சாய்ந்ததால் வளைந்தேனடி

நானாக நான் இருந்தேன் நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே..
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே.

ஒரு யாசகம் கேட்டு உந்தன் வாசல் வந்து காத்து நின்றேன்
சிறு பார்வையை பார்த்து என்னை சேர்த்து கொள்வாயோ…

குருத்து ஓலையாய் நானும் உந்தன் வாசல் வந்து ஊஞ்சல் அட
மாவிலை என வந்து நீ சேர்த்து கொள்வாயோ…

தூரிகை உதடு நீதான் காகிதக் கன்னம் நான்தான் இரவும் பகலும் எழுதேன்டா
வானத்தை பார்க்கும் பூ நீ பூமியில் வாழும் வேர் நான் வேரும் பூவும் வேறு இல்லை

கிணற்றில் தண்ணீர் எடுக்கையில் பின் வாசல் நீ
நான் கோலம் போடும் வேளையில் முன் வாசல் நீ

நிற்க்கும் போது கேட்க்கின்ற சிரிப்பு ஓசை நான்
நீ நடக்கும் போது கேட்க்கின்ற கொலுசோசை நான்

லையோ லையோ லையோ லையோ லையோ லையோ லையோலோ
லையோ லையோ லையோ லையோ லையோ லையோ லையோலோ

ஒரு வாலிப சிங்கம் அதன் காட்டுக்குள்ளே ஓடி வந்து
சிறு புன்னகை செய்தாய் நான் பூனை ஆனேனே

ஒரு தாமரை பூ நான் அதில் உள்ள இதழ் அத்தனையும்
உன் பேரினை பேசும் அந்த ஓசை கேட்டாயோ… ஓ..

சத்தங்கள் கூட இன்று சங்கீதம் ஆகுமடி வலை ஓசை சொன்னேனே
ஏழு வண்ண வானவில் மண் மீது வாழுதடா
உந்தன் கையின் ரேகை சொன்னேனே

நிற்க்கும் போது கேட்க்கின்ற சிரிப்பு ஓசை நான்
நீ நடக்கும் போது கேட்க்கின்ற கொலுசு ஓசை நான்

கிணற்றில் தண்ணீர் எடுக்கையில் பின் வாசல் நீ
நான் கோலம் போடும் வேளையில் முன் வாசல் நீ

நானாக நான் இருந்தேன் நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே… ஏ…
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே… ஏ…

கொட்டாங்க்குச்சிக்கு உள்ளே ரெண்டு பட்டாம்பூச்சி நான்தானே
நூலை தொட்டு காலை உரசும் சோலையாக மூடவந்தேன்

சின்ன சின்ன பூக்கள் நான் மலர்மாலை நீ
நான் கண்கள் திறந்து பார்க்கின்ற அதிகாலை நீ

ஆலமரம் போலவே இருந்தேனடி
ஒரு வாழை மரம் சாய்ந்ததால் வளைந்தேனடி…

Movie: Gambeeram
Lyrics: Kabilan
Music: Mani Sharma