Lyricist Kabilan

ஒரு சின்ன வெண்ணிலா பாடல் வரிகள்

ஒரு சின்ன வெண்ணிலா போலே நான் வானில் போகிறேன் மேலே
அடி துள்ளி குதிப்பது இங்கு ஏன்தான்
நீ தூண்டில் மாட்டிக்கொண்ட மீன்தான்

சந்தன பூ நெற்றியிலே குங்குமத்தை இட்டு கொண்டு
சங்கமிக்க போகும் பெண் ஆவாள்
அழகிய அங்கமெல்லாம் மின்னும் பொன் ஆவாள்

மலரே மலரே… அவன் தேதில் மூழ்கும் நேரம்
மெதுவாய் மெதுவாய் இந்த பூவில் பாரம் ஏறும்
அடியே. அடியே. இனி நீயும் அவனும் ஏதேதோ

ஒரு சின்ன வெண்ணிலா போலே நான் வானில் போகிறேன் மேலே

முத்த கதைகள் முற்றும் கரைய வெந்நீர் கொண்டு நீராடினேன்.
உன்னை கண்டதால் என்னை மறந்தேன் தீயில் வேகும் நீராகிறேன்

காடு மலைகள் கை வீசி நடந்தேன் உனது நிழலில் நான் நிற்கிறேன்
உச்சந்தலையில் நேர்கோடு கிழித்து தலைவன் போக தலை சாய்கிறேன்

அந்த கோயில் கதவை மூடு இவள் கை கோர்க்கும் கடவுள் நீதான்
அட கண்ணீரே இல்லா கண்கள் இனி என்னோட கண்கள் தானே

சந்தன பூ நெற்றியிலே குங்குமத்தை இட்டு கொண்டு
சங்கமிக்க போகும் பெண் ஆவாள்
அழகிய அங்கமெல்லாம் மின்னும் பொன் ஆவாள்

ஒரு சின்ன வெண்ணிலா போலே நான் வானில் போகிறேன் மேலே
அடி துள்ளி குதிப்பது இங்கு ஏன்தான்
நீ தூண்டில் மாட்டிக்கொண்ட மீன்தான்

குத்து விளக்காய் கூடி இருந்தேன் மின்னல் போல ஓடோடினேன்
சின்ன விதையாய் மண்ணில் இருந்தேன் வேர்கள் விட்டு ஆளாகினேன்

மீசை கயிற்றில் பொன்னுஞ்சல் அமைத்து உனது குழந்தை தாலாட்டுவேன்
பசிக்கும் பொழுது மடிமீது வைத்து நிலவை பிழிந்து பாலூட்டுவேன்

குழல் மீட்டும் விரலாய் வந்தாய் நான் கற்பூர தீயை ஆனேன்
இவள் கன்னத்தை கிள்ளி போனாய் ஒரு ஆனந்த பெண்ணாய் ஆனேன்

வெள்ளி நிலா கன்னத்திலே வெட்கம் வந்து ஒட்டி கொள்ள
முத்தத்தாலே துடைப்பவன் யார்
சொல்லடி முந்தானைக்கு சொந்தகாரன் யார்

ஒரு காதல் தேவனை கண்டேன் அவன் கண்ணில் தூங்கவே வந்தேன்
அதி காலை சூரியன் நீதான் உன்னை பார்த்து பூக்கின்ற பூ நான்

ஒரு நாள் ஒரு நாள் இவள் நெஞ்சுக்குள்ளே வீழ்ந்தான்
உயிராய் உயிராய் இவள் தேகம் எங்கும் வாழ்ந்தான்
அடடா.. அடடா.. நான் உன்னால் நாளை தாயாவேன்…

Movie: Gambeeram
Lyrics: Kabilan
Music: Mani Sharma