Movie: Chinna Pasanga Naanga (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Added Date: Feb 11, 2022
ஆண்: மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன் மானானது யாரோ மகராணியே நீயோ மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ
பெண்: மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன்
குழு: ………..
ஆண்: வெல்வெட்டுக் கன்னம் தொட்டு வைக்கின்ற முத்தம் எல்லாம் கல்வெட்டு போலே நிற்கும் கண்ணே நம் காலம் எல்லாம்
பெண்: நேசித்து நெஞ்சில் வைத்து நீண்ட காலம் யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம்
ஆண்: யோசித்து ஒவ்வொன்றாக காதல் பாடம் வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்
பெண்: மை விழியோரம் ஐவகை பாணம்
ஆண்: மன்மதன் போடும் மங்கல நேரம்
பெண்: பொன் மாலைப் பொழுதினிலே.
ஆண்: மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
பெண்: மானானது யாரோ மகராஜனே நீயோ…
பெண்: உள்ளத்தின் உண்டியலில் உன் ஆசை எண்ணங்களை சேமித்து வைத்த கன்னி சிந்தித்தாள் உன்னை எண்ணி
ஆண்: சேமித்த அன்புத் தேனை நானும் வாங்க சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க
பெண்: பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம் போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்
ஆண்: மீதங்கள் இன்றி மோகங்கள் கூட
பெண்: மோகங்கள் நூறு ராகங்கள் பாட
ஆண்: சங்கீத மயக்கத்திலே..ஏ…
பெண்: மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன் மானானது யாரோ மகராஜனே நீயோ மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ
ஆண்: மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன்