Lyricist Snehan

மனிதன் சொல்கின்ற பாடல் வரிகள்

மனிதன் சொல்கின்ற நியாயங்கள் என்ன 
பிரமன் உண்டாக்கும் மாயங்கள் என்ன பார்

தீமையின் வேர்களை அழித்திடத் தொடங்கும் 
தர்மத்தின் பயணம் இது
பூமிக்குள் புதைப்படும் மாமிச கூட்டின் 
வேஷத்தை கலைக்கும் இது 
ஓ…ஓ…ஓ ஓ………..ஓ….ஓ……

பூர்ண பிரமம் புரிந்த மானிடா
பூமி கடனை அடைவது யாரடா
புண்ணிய கர்மம் அறிந்த மானிடா
இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா

யார் யாரை குறை கூறுவார்
இவன் போர் மீது தடை போடுவார்
தர்மம் அழியும் நேரம் இது தான் கண்ணை மூடாதே 
ஞானம் கொஞ்சம் எல்லை கடந்தால் தீமை வாழாதே

அகங்கார மானிடத்தின் மூர்க்கம்
அவதாரம் எடுத்து அது தோற்க்கும்
வேதங்கள் சொல்லும் சாத்திரம்
மீளுமோ மண்ணில் வீழுமோ
இறைவா …ஆஆஆஆ…..

மனிதன் சொல்கின்ற நியாயங்கள் என்ன
பிரமன் உண்டாக்கும் மாயங்கள் என்ன பார்

தீமையின் வேர்களை அழித்திடத் தொடங்கும்
தர்மத்தின் பயணம் இது பூமிக்குள் புதைப்படும்
மாமிச கூட்டின் வேஷத்தை கலைக்கும் இது
ஓ…ஓ…ஓ ஓ………..ஓ….ஓ……

பூர்ண பிரமம் புரிந்த மானிடா
பூமி கடனை அடைவது யாரடா
புண்ணிய கர்மம் அறிந்த மானிடா
இன்னொரு ஜென்மம் இல்லை கேளடா

நல்லோர் வாழ்ந்திட துஷ்டர் அழிந்திட
சத்திய வாழ்க்கை எங்கும் நிலைத்திட
போர்க்களம் வென்றால் ராஜ்ஜியம் ஆள்வாய்
போரினில் மாண்டால்
சொர்கத்தை அடைவாய்…ஆஆ
சொர்கத்தை அடைவாய்…ஆஆ…

Movie: Raam
Lyrics: Snehan
Music: Yuvan Shankar Raja

Leave a Reply