Movie: Aarilirunthu Arubathu Varai (1979)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S.P. Balasubrahmaniyam and S.Janaki
Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ
பெண்: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
குழு: …….
ஆண்: கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ
ஆண்: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
பெண்: ………..
ஆண்: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா
பெண்: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்தப் பாவையின் உள்ளத்திலே
ஆண்: பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
பெண்: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
ஆண்: கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ
பெண்: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
பெண்: ……….
பெண்: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன்
ஆண்: நாளொரு வேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம்
பெண்: தோள்களில் நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
ஆண்: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
பெண்: கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ
ஆண்: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
பெண்: கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ