Lyricist Pa.Vijay

கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே பாடல் வரிகள்

ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா

கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே
அன்பே நம் நெஞ்சில்
கண் இமை போலத்தான் காதல்
என்றும் விலகாதே அன்பே நம் கண்ணில்

மெழுகாகவே நெஞ்சம் நெஞ்சம்
மெதுவாகவே உருகும் கொஞ்சம்
சில சொல்லாத சோகங்கள் சுகமாகும் இதமாகும்

ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா

எந்த பறவை என்னை கடந்து போகும் பொழுதும்
உன்னை நினைத்தேன்
எங்கோ இருந்து நீயும் என்னை நினைப்பாய் என்றே
நிதமும் நினைத்தேன்

ஏதோ பாரம் இதயம் சுமந்தாள்
உன் நெஞ்சில் சாய்ந்து அழவே நினைத்தேன்

நினைவெல்லாம் நினைவெல்லாம் நிஜமாக நினைத்தேன்
உனக்காக ஒரு நாளில் உயிர் தரவும் நினைத்தேன்

ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா

கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே
அன்பே நம் நெஞ்சில்

உந்தன் கண்கள் கலங்கும் நொடியில்
காற்றின் விரலாய் கண்ணீர் துடைப்பேன்

உன்னை எழுதும் கவிதை அதிலே
கடைசி வார்த்தை நானாய் இருப்பேன்

உன்னை சுற்றி கனவாய் வருவேன்
நீ வேண்டாம் என்றால் கலைந்தே விடுவேன்

பிரிந்தாலும் உன் நினைவை பிரியாமல் இருப்பேன்
இறந்தாலும் உனக்கென்றும் தெரியாமல் இறப்பேன்

ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா

கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே
அன்பே நம் நெஞ்சில்

கண் இமை போலத்தான் காதல் என்றும் விலகாதே
அன்பே நம் கண்ணில்

மெழுகாகவே நெஞ்சம் நெஞ்சம்
மெதுவாகவே உருகும் கொஞ்சம்
சில சொல்லாத சோகங்கள் சுகமாகும் இதமாகும்

ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா…

Movie: Ninaithathu Yaaro
Lyrics: Pa.Vijay
Music: X. Paulraj