Lyricist Kalaikumar

காதல் அழகா பாடல் வரிகள்

காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்

கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்

என் காதல் கல்வெட்டில் நம் பேர் செதுக்குவேன்
என் நெஞ்சின் வெல்வெட்டில் உன்னை பதுக்குவேன்

அந்த வெண்ணிலாவிலே உந்தன்
படத்தயே ஒட்டி விட்டு வருவேன்….

காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்

லட்சம் பூக்கள் ஒட்டி வைத்த சிற்பம்
பக்கம் வந்தும் கண்ணில் என்ன வெட்கம்
என்னை தீண்டாயோ நீ என்னை தீண்டாயோ

ஊசி மல்லி பார்வை என்னை கிள்ளும்
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று அல்லும்
மின்னல் தோன்றாதோ வண்ண மின்னல் தோன்றாதோ

கையோடு கை கோர்த்தால் அச்சம்தான் விலகாதோ
ஓயாமல் நீ பார்த்தாள் மச்சம்தான் நகராதோ
உன் கண்ணின் மீன்களை பார்த்து விட்டதால்
சைவ வாழ்க்கை வாழ்வேன்

காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்

ஆஅ……கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன் ஆஅ……ஆஅ……ஆ…..

என்னை உன்னில் அடகு வைக்க வருவேன்
சின்ன சின்ன முத்த வட்டி தருவேன்
காதல் கடன்தானே இது காதல் கடன்தானே

இச்சு இச்சு சத்தம் என்னைத்தானே
கிச்சு கிச்சு மூட்ட சொக்கி போவேன்
காதல் கடல் தானே இது காதல் கடல் தானே

உன் ஆடை நானாக கெஞ்சிதான் கேட்பேனே
உதட்டாலே மறுத்தாலும் உள்ளார ரசிப்பேனே

அட காதல் பாடம்தான்
முடிந்து போனதே பரீட்சை எழுதலாமா

ஏ…..காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்

கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்

என் காதல் கல்வெட்டில் நம் பேர் செதுக்குவேன்
என் நெஞ்சின் வெல்வெட்டில் உன்னை பதுக்குவேன்

அந்த வெண்ணிலவிலே உந்தன்
படத்தயே ஒட்டி விட்டு வருவேன்…

Movie: Paattali
Lyrics: Kalaikumar
Music: S. A. Rajkumar