காத்திருந்தாளே பாடல் வரிகள்
காத்திருந்தாளே ராஜகுமாரி காத்திருந்தாளே ராஜகுமாரி
காவலன் நாளை வருவானா காவலன் நாளை வருவானா..
பல்லாக்கு அங்கே காத்திருக்கு பட்டாடை இங்கே தவமிருக்கு..
காவலன் நாளை வருவானா
மனம் போலவே மாங்கல்யமா
பெரியோரின் வார்த்தை யாவும் பொய்யாச்சு
வலை வீசுவார் விலை பேசுவார்
பெண்ணாக மண்ணில் நாங்கள் பிறந்தாச்சு..
திருமண சந்தை கூடி இருக்குது தேவனும் வருவானா
உடலை பார்க்கும் ஆடவர் நடுவே உள்ளத்தை பார்ப்பானா..
பூமாலை நாளை யாரிடமோ இசை மேடையில் ஒரு வாத்தியம்..
எனை தீண்ட யாருமில்லை என்றதில்லை..
எழில் வானிலே இளம் வெண் புறா பறந்தாட பாதை இன்றி போனதில்லை…
பொன்னொளி வீசும் வெண்ணிலவே அடி உன்னிடம் குறை இல்லையா..
கண்மணிக்காக மின்மினி பூச்சி தன்னொளி தரவில்லையா
யாரோடு யாரோ யாரறிவார் காவலன் நாளை வருவானா…
Movie: Suyamvaram
Lyrics: Mu. Metha
Music: S. A. Rajkumar