Lyricist Thamarai

எங்கேயும் காதல் பாடல் வரிகள்

ஆஹா யே எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட முதல்வரும் காதல்
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்

காதல் என்னும் தேனே கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே மழை வெயில் என நான்கு காலம் நீயே

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும் விடியலிலும் நடு இரவினிலும்

இது ஓயாதே ஓயாதே சிரிப்பினிலும் பல சினுங்களிலும் மிக கலந்து காத்திருக்கும்
ஓ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காதே தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல் மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும் யார் சொன்னாலும் கேட்காதே
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும் இது புரண்டு தீர்த்திடுமே
முகங்களையோ உடல் நிறங்களையோ இது பார்க்காதே பார்க்காதே

இரு உடலில் ஓர் உயிர் இருக்க அது முயன்று பார்த்திடுமே
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும் பூசென்றாய் பூமி திண்டாடும்

எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல் மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்

காதல் என்னும் தேனே கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே மழை வெயில் என நான்கு காலம் நீயே…

Movie: Engeyum Kadhal
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj