Lyricist Thamarai

மலர்களே மலர்களே பாடல் வரிகள்

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்
தென்றல் தோழனை அழைத்து வந்து திணை விருந்து கொடுத்து விட்டு
வம்பு செய்திகளை சுவைத்துகொண்டு சிரித்து முறைத்து விருப்பம் போல வாழும்

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்

ஆடைகள் சுமை தானே அதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன்
யார் யேனும் பார்பார்கள் என்று கவலை ஏதும் இன்றி கழித்தேன்

குழந்தை என மீண்டும் மாறும் ஆசை எல்லோர்க்கும் இருக்கிரதே
சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டேன் என் உள்ளம் சொல்கிறதே

அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணி பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைக்கு இணை இன்று ஏதுமில்லயே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்

நீரோடு ஒரு காதல் கடல் அலையில் கால் நனைய நடப்பேன்
ஆகாயம் எனை பார்க்க மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்
புதிய பல பறவை கூட்டம் வானில் பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா என்றே தான் அழைக்கிறதே

முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்திட ஆள்கள் இல்லையே காலம் நேரம் கடந்த ஞான நிலை

மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை ஓய்விடுங்கள்…

Movie: Pudhukottaiyilirundhu Saravanan
Lyrics: Thamarai
Music: Yuvan Shankar Raja