Movie: Bramma (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Added Date: Feb 11, 2022
குழு: ………….
பெண்: வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு.
ஆண்: சிறகு முளைத்த கிளி போலே மனம் பறக்க நினைக்கும் புவி மேலே தனிமை நினைவு இனி ஏது ஒரு தலைவன் தழுவ வரும்போது .
பெண்: வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு.
ஆண்: நாடியெங்கும் ஓடிச்சென்று நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே .
பெண்: நேசம் என்னும் நெய்யை விட்டு நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே .
ஆண்: தோளில் உனை தாங்குவேன் இதழ் தேனை..தினம் வாங்குவேன்
பெண்: கேளு பரிமாறுவேன் அதில் நானும் பசியாறுவேன்.
ஆண்: பாலும் தேனும் தீர தீர ஊறுமா.
பெண்: வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
ஆண்: இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு.
குழு: ………………
பெண்: ஊரைச் சுற்றும் தேரும் இன்று சேரும் இடம் சேராமல் வாடுதே..
ஆண்: தேவன் வந்தான்..தேரைக்கண்டு சோகம் இனி சொல்லாமல் ஓடுமே..
பெண்: நாளை சுப வேளைதான் அதில் கூடும் மணமாலை தான்
ஆண்: நாளும் புது லீலைதான் இனி ஏது இடைவேளை தான் .
பெண்: ஆடல் பாடல் ஆவல் தீர காணலாம்
ஆண்: வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு.
பெண்: சிறகு முளைத்த கிளி போலே மனம் பறக்க நினைக்கும் புவி மேலே தனிமை நினைவு இனி ஏது ஒரு தலைவன் தழுவ வரும்போது .
ஆண்: வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
பெண்: இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு