Lyricist Vaali

வளையல் கரங்களை பார்க்கிறேன் பாடல் வரிகள்

ஓ ஓஓ ஓ ஓஓ ஓஹோ ஓஹோ ஓஓ

வளையல் கரங்களை பார்க்கிறேன்
வியந்து வேர்க்கிறேன்
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவில் துளிர்த்ததா விழிகள் சிவந்து போனதா

தொட்டாலே தொட்டாலே பூ தான்
மலரும் தொடாமல் பூத்த பூவே
சுட்டாலே சுட்டாலே பொன் தான்
மின்னும் சுடாமல் மின்னும் பொன்னே

கண்ணே உன் கண்ணே உன் கண்ணில்
யாரு காதோடு கூறு மானே
கைகூடும் கைகூடும் எண்ணம் யாவும் கல்யாண நாளில் தானே

வளையல் கரங்களை பார்க்கிறேன் வியந்து வேர்க்கிறேன்
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவில் துளிர்த்ததா விழிகள் சிவந்து போனதா

ஓ… ஒவ்வொரு கையிலும் வண்ண கோலங்கள் வரைந்தவன்
வீட்டிலே வாழ்பவர் நெஞ்சம் யாவிலும் நிறைந்தவா்

குடும்பத்தில் நானும் இன்று ஒருவன் குயிலென பாடுகின்ற
சிறுவன் அனைவருக்கும் எனை பிடிக்கும்

பிரிவுகள் எந்த நாளும் வாராது இடி
மின்னல் தாக்கும் போது கூட பிளவுகள் என்றும்
வானில் நேராது நீ இல்லாமல் நானேது

இந்நாளும் எந்நாளும் உன்னை பாட எங்கேயும்
தென்றல் உண்டு உன்னோடு உன்னோடு
சேரும் எந்தன் அன்பான கண்கள் இரண்டு

ஓ… நங்கையே நானொரு நாடி ஜோசியம்
தெரிந்தவன் யார் மனம் யார் வசம் பூர்வ ஜாதகம் புரிந்தவன்

அரும்பிய ஆசை பூத்து காய்க்கும் அதற்கொரு
வேலை வந்து வாய்க்கும்
தமிழ் அறிந்த இசை கலைஞன்
எனது சொல் எந்த நாளும் தோற்காது

விரும்பிய கைகள் சூடும் மாலை விழுந்திடும்
வஞ்சி உந்தன் தோள் மீது
வா உன் வாழ்வு உன் கையில்

செவ்வந்தி செவ்வந்தி பூவே நீ தான் சந்தோசம்
காண வேண்டும் செந்தூர
செந்தூர கன்னம் பார்த்து செவ்வானம் நாண வேண்டும்

வளையல் கரங்களை பார்க்கிறேன்
வியந்து வேர்க்கிறேன் அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவில் துளிர்த்ததா விழிகள் சிவந்து போனதா

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ…

Movie: Thottal Poo Malarum
Lyrics: Vaali 
Music: Yuvan Shankar Raja