Movie: Chinna (2005)
Music: D. Imman
Lyricists: Pa.Vijay
Singers: Bombay Jayashree
Added Date: Feb 11, 2022
பெண்: தீண்ட தீண்ட பார்வை தீண்ட மலர்ந்தேன் நான் ஒரு மலர் என மலர்ந்தேன்
பெண்: பார்த்து பார்த்து ஆசை தூண்ட சரிந்தேன் உன் இரு கைகளில் சரிந்தேன்
பெண்: யார் தாகமோ யார் மோகமோ அழைக்கிறதே ஏதோ நினைகிறதே அசைகிறதே நெஞ்சை தேடுகிறேன்
பெண்கள்: தீண்ட தீண்ட பார்வை தீண்ட மலர்ந்தேன் நான் ஒரு மலர் என மலர்ந்தேன்
பெண்கள்: பார்த்து பார்த்து ஆசை தூண்ட சரிந்தேன் உன் இரு கைகளில் சரிந்தேன்
பெண்: யாரோ என் விழி அறையில் இன்று எண்ணம் தோன்றிடுதே அவனோ என்றேன் மனதில் ஒரு ஆசை எற்படுதே…ஏ…ஏ…
பெண்: என்னை அழகிய குடையாய் அவன் கைகள் ஏந்தியதே ஆடை அதில் ஒரு தடையாய் என் நானும் எண்ணிடுதே
பெண்: கூந்தல் எனும் பூக்காட்டில் ஓஒ பறித்திட சேர்ந்தேனே கண்ணில் வந்த மின்சாரம் கால் பரவிட செய்தானே
பெண்: இருதயம் அவனுக்கு துடிக்கும் என் இளமையும் அவனுக்கு பிடிக்கும் இந்த இருபது வயது குறும்புகள் எல்லாம் நெஞ்சோடு அடம் பிடிக்கும்
பெண்கள்: தீண்ட தீண்ட பார்வை தீண்ட மலர்ந்தேன் நான் ஒரு மலர் என மலர்ந்தேன்
பெண்கள்: பார்த்து பார்த்து ஆசை தூண்ட சரிந்தேன் உன் இரு கைகளில் சரிந்தேன்
பெண்: பெண்மை என் முகம் முழுதும் துளி வேர்வை போக்கிடவ தூங்கும் வேளையில் மெதுவாய் ஒரு போர்வை போத்திட வா
பெண்: நீரில் நான் கொஞ்சம் நனைந்தால் உன் இதழால் துவட்டிட வா ஏதோ ஒரு பயம் இருந்தால் உன் நிழலில் பதுங்கிடவா
பெண்: என்னை ஒரு பூ போல உன் மடியினில் தாலாட்டு ஈர விழி ஓரங்கள் உன் உயிரையும் நீ தீட்டு
பெண்: முதல் முறை வருகிற ஸ்பரிசம் இதில் முழுவதும் இருக்கட்டும் நேசம் என் கனவுகள்கூட நறுமணம் வீசும் அன்பான உன் வாசம்
பெண்கள்: தீண்ட தீண்ட பார்வை தீண்ட மலர்ந்தேன் நான் ஒரு மலர் என மலர்ந்தேன்
பெண்கள்: பார்த்து பார்த்து ஆசை தூண்ட சரிந்தேன் உன் இரு கைகளில் சரிந்தேன்
பெண்: யார் தாகமோ யார் மோகமோ அழைக்கிறதே அழைக்கிறதே ஏதோ நினைகிறதே நினைகிறதே அசைகிறதே அசைகிறதே நெஞ்சை தேடுகிறேன் நெஞ்சை தேடுகிறேன்