Thanakkoru Sorgathai Song Lyrics

Movie: Vaazha Ninaithaal Vaazhalaam (1978)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா..ஆஆ..ஆஅ…ஆஅ… ஆஅ..ஆஅ…ஆஅ…ஆஅ…ஆஅ..ஆ… ஹா…ஹா…ஹாஆ…ஆஅ..ஆ… ஆஅ..ஆஅ…ஆஅ…ஆஅ…ஆஅ..ஆ… ஹா…ஹா…ஹாஆ…ஹா…ஆஅ..ஆ… ஹா..ஆஆ..ஆஅ…ஆஅ…

பெண்: தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள்

பெண்: தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள் தடை போட மனிதர்களே நீங்களா..ஆ… ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

பெண்: தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள்

பெண்: அரசனின் மகனல்ல அம்பிகாபதி..ஈஈ…ஈஈ… அமர காவியம் பாடினாள் அமராவதி இறைவனின் சாலையில் விதித்த விதி ஈஈ…ஈஈ…ஈஈ…ஈஈ… அரசன் தலையிட்டால் அதுதான் கதி ஈஈ…ஈஈ… அதுதான் கதி

பெண்: பவளங்கள் எல்லாம் மலையில் பிறந்தும் மலைக்கது சொந்தம் இல்லை ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும் அதில் ஒரு தவறும் இல்லை

குழு: பவளங்கள் எல்லாம் மலையில் பிறந்தும் மலைக்கது சொந்தம் இல்லை ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும் அதில் ஒரு தவறும் இல்லை

பெண்: பணம் உள்ள இடம் உலகை ஆட்டலாம் பகுத்தறிவுள்ள உறவும் ஆடுமா மனமே..ஏ..ஏ…ஏ.. நதி செல்லும் வழிதன்னை யார் சொன்னது ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

பெண்: தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள்

பெண்: …………..
குழு: …………….

பெண்: காதல் என்பது தேவனின் சன்னிதி ஈஈ…ஈஈ…ஈஈ…ஈஈ… தடையென்று வந்தால் முடிவுதான் நிம்மதி

பெண்: தந்தையின் பெருமையா மகளின் நற்கதி…ஈஈ…ஈஈ…ஈஈ… தானென்று நினைப்போர்க்கு இல்லையோர் சந்ததி…ஈஈ..ஈஈ…ஈஈ.. இல்லையோர் சந்ததி

பெண்: கனி விட்டதோடு கடமை முடிந்தது கைகளைக் கழுவுங்கள் அந்தக் கனியை அழகிய கிளியொன்று ரசிக்கட்டும் கண்களை மூடுங்கள்

பெண்: உலகமும் இதில் உளுந்து போன்றது மரணமும் இதில் கடுகு போன்றது மனமே..ஏ..ஏ..ஏ..ஏ.. மரணத்தில்தான் இனி பிரிவென்பது ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

பெண்: தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள்

பெண்: தடை போட மனிதர்களே நீங்களா..ஆ… ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

குழு: தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள்