Lyricist Vaali

சிங்கார கண்ணுக்கு பாடல் வரிகள்

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
சென்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா

தேன் பாலா.. வந்தாளா மாமுலா தந்தாளா
ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாசு என் கும்பமேலா மேனிதான் ஊஞ்சலா

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா

ஹேய் அக்கம் பக்கம் யாருமில்லை இந்த ஆலமர காட்டுக்குள்ள
வெட்கம் கிட்கம் தேவையில்லை வந்து சேர்ந்துக்க என் கூட்டுக்குள்ள

அம்மாடி அம்மாடி வானம் பூமி எல்லாமே எல்லாமும் பார்க்கும்
கச்சேரி வைக்காம கோட்ட தாண்டி எட்டூரும் உன் பாட்ட கேக்கும்

வேனுமின்னு கேட்குது மனசு வேலிகளை தான்டுர வயசு
பொறுத்துக்க பொரந்திடும் நல்ல நாள் நாயனம் ஊதிடதான்

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
சென்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா

முன்ன பின்ன தொட்டதில்ல அடி தொட்டத நான் விட்டதில்ல
ஒன்னுக்குள்ள ஒன்னுக்குள்ள நாம ஒட்டிக்கிட்டா குற்றமில்ல

என்னான்னு ஏதுன்னு ராசா ராசா என்னோடு உக்காந்து பேசு
எம்மேணி வேர்க்காமல் ஈரக்காத்தா இப்போது சில்லுன்னு வீசு

பூட்டி வச்ச பூ இத திறந்து ஊதிக்குடு வாலிப விருந்து
கொடுக்கவா எடுக்கவா அம்மம்மா ராத்திரி ஆகிடனும்

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா
சென்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா

தேன் பாலா வந்தாளா மாமுலா தந்தாளா
ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாசு என் கும்பமேலா மேனிதான் ஊஞ்சலா

சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா எ நந்தலாலா…

Movie: Vishnu
Lyrics: Vaali
Music: Deva