Sakkarai Nilave Song Lyrics

Movie: Youth (2002)
Music: Mani Sharma
Lyricists: Vairamuthu
Singers: Harish Raghavendra

Added Date: Feb 11, 2022

ஆண்: { சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே } (2)

ஆண்: மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே அதை பற்ற வைத்தது உன் கண்ணே என் வாழ்க்கை என்னும் காட்டை எாித்து குளிா் காய்ந்தாய் கொடுமை பெண்ணே கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

ஆண்: சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

ஆண்: ………….. காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வாா்த்தை இல்லை

ஆண்: அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன் கண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதேன் வெள்ளை சிாிப்புகள் உன் தவறா அதில் கொள்ளை போனது என் தவறா பிாிந்து சென்றது உன் தவறா நான் புாிந்து கொண்டது என் தவறா ஆண் கண்ணீா் பருகும் பெண்ணின் இதயம் சதையல்ல கல்லின் சுவரா

ஆண்: கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

ஆண்: நவம்பா் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்

ஆண்: சுகமான குரல் யாா் என்றால் சுசீலாவின் குரல் என்றேன் எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய் கண்கள் மூடிய புத்தா் சிலை என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன் தயக்கம் என்பதே சிறிதும் இன்றி அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய் அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய்