Paruvam Kaninthu Vandha Song Lyrics

Movie: Yaaro Ezhuthiya Kavithai (1986)
Music: Anand Sankar
Lyricists: Vairamuthu
Singers: Vani Jayaram and K. J. Jesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: பருவம் கனிந்து வந்த பாவை வருக புடவை அணிந்து வந்த பூவே வருக ஆஹா சொந்தம் ஆனந்தம் சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்

பெண்: ஆஹா சொந்தம் ஆனந்தம் சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
ஆண்: கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக

பெண்: பருவம் கனிந்து வந்த பாவை இவளே புடவை அணிந்து வந்த பூவே இவளே
ஆண்: யாரோ எழுதிய கவிதை மனப்பாடம் செய்தேன் வரிகளை இவள் யாரோ எழுதிய கவிதை மனப்பாடம் செய்தேன் வரிகளை

பெண்: காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே புடவை அணிந்து வந்த பூவே இவளே

ஆண்: கண்ணே.ஒரே பார்வைதான் பார்த்தாய் நெஞ்சில் மழை வீழ்ந்ததே உறவுகள் துளிர்விட்டதே
பெண்: ஒரே கேள்விதான் கேட்டாய் நெஞ்சம் அலைபாய்ந்ததே

ஆண்: முழுமதி என்றாலும் முகவரி சொல்லாது
பெண்: உயிர் எங்கு சென்றாலும் உனைவிட்டு செல்லாது
ஆண்: நீ இல்லாது நானும் ஏது
பெண்: காதல் பருவம் கனிந்து வந்த பாவை இவளே புடவை அணிந்து வந்த பூவே இவளே.

பெண்: அன்பே.கண்ணால் பேசுங்கள் போதும் நெஞ்சில் நிலா காயுமே உயிருக்குள் சுகம் வருமே
ஆண்: ஒரே புன்னகை போதும் உள்ளே வெள்ளம் பாயுமே

பெண்: நிலவொன்று கண்ணீரில் மிதந்தது அப்போது
ஆண்: கறைகளும் இல்லாமல் கரை வந்ததிப்போது
பெண்: தோளை சேர்த்து மாலை மாற்று

ஆண்: பருவம் கனிந்து வந்த பாவை வருக புடவை அணிந்து வந்த பூவே வருக
பெண்: ஆஹா சொந்தம் ஆனந்தம் சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
ஆண்: கண்ணோடு
பெண்: கண்ணாக
ஆண்: ஒன்றோடு
பெண்: ஒன்றாக

இருவர்: லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா லலல்ல லலல்ல லல்ல லாலா லல லா