பூவா தலையா போட்டு பாத்தேன் பாடல் வரிகள்

யாருமில்லா காட்டுக்குள்ள நான்தான் ராஜா
ஆண்டவன நேரில் கண்டா கையேடு கொண்டா

பூவா தலையா போட்டு பாத்தேன்
தல கீழா திருப்பி கேட்டேன்
வேலை பேசி வாங்க பாத்தேன் பதிலே இல்லையே

ஆண்டவனே ஆண்டவனே கொஞ்சம் பேசு
கவலை இல்லா இதயம் உண்டா கண்ணில் காட்டு

ஒரு நாள் இரவில நான் கொஞ்சம் அழுதேன்
ஏன்டா பொறந்தோமின்னு நினைச்சேன்
தனியா ஒரு பிடி நேசம் தின்னு பாத்தேன்
தெளிவாச்சு உள் நெஞ்சு நெருப்பாச்சு

கேக்காத கேள்விக்கு எல்லாம்
பதில் தேடி பாக்கயிலேதான்
திறக்காத கதவொன்னுதானா
ஒரு திரை போல விலகிடலாச்சு

வடக்குக்கும் தெக்குக்கும் போக
வழிகாட்டியோ யாருன்னு சொல்லு
ஒரு தாயத்த உருட்டி போட்டு
ஒன்னா ஆறா எண்ணிப் பாரு

யாருமில்ல காட்டுக்குள்ள நான்தான் ராஜா….
ராஜா ராஜா ஜ ஜ ஜ ஜ ஜ

எனது உனதென்று எதுவும் இங்கே கிடையாது
விதிகள் உடையாமல் விடைகள் கண்ணில் தெரியாது

அடிமேல் அடி வைத்து மெதுவாய் மெதுவாய் நடை போடு….
முடிவும் ஆரம்பம் மீண்டும் தொடங்கு முதல் பாட்டு….

மீண்டும் தொடங்கு முதல் பாட்டு….ஊ…..ஊ…..
மீண்டும் தொடங்கு முதல் பாட்டு வாடா….

புத்தி சொல்லும் திட்டம் மட்டும் மொத்தம் கேளு ஏன்டா…
வெட்டி வீசும் கத்தி எல்லை கோடு உண்டா கூறு

சரி தவறா பிரிச்சு வரி வரியா படிச்சு
தர்மம் நீதி வெல்லுமின்னு சட்டமில்ல

கடவுள் நின்னு கொல்லும் கதைகள் இல்லம் கனவு
தீர்ப்பு சொல்ல வானத்துல யாரும் இல்ல

ஆண்டவனே ஆண்டவனே கொஞ்சம் பேசு
நீ இருந்தா இந்த பக்கம் ஓர பார்வை பாரு வாடா….

புத்தி சொல்லும் திட்டம் மட்டும் மொத்தம் கேளு ஏன்டா….
வெட்டி வீசும் கத்தி எல்லை கோடு உண்டா கூறு வாடா…

Movie: Vaanam Kottattum
Lyrics: Siva Ananth
Music: Sid Sriram