Lyricist Mu. Metha

பெத்து எடுத்தவதான் பாடல் வரிகள்

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா

பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சுபோன வில்லாச்சு

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
தத்து கொடுத்துப்புட்டா

வயித்துல வளத்த புள்ள வந்து நிக்க வாசலில்லை
மடியில வளந்ததுக்கு இங்கிருக்க ஆசையில்லை

மகனா பொறந்ததுக்கு தொட்டணைக்க தாயுமில்லை
மகனா வளர்ந்த புள்ள துள்ளுறது நியாயமில்லை

தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்லை
தோளிலே வாழும் வரை துன்பமின்னு ஒன்னுமில்லை

கட்டில பார்த்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல
கண்ணுல ஆறிருக்கு போவதுக்கு தோணி இல்லை

சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி முடிச்சிரலாம்
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்
காவிரி கங்கை ஆறுகள் போல கண்களும் இங்கே நீராட

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா

தலையில் வகிடெடுத்த தங்க விரல் பார்த்தேனே
தலையில எழுதிவைச்ச அந்த விரல் பார்த்தேனா

கிளியை வளர்த்தெடுத்தா கேள்வியது கேட்காது
புலியை வளர்த்தெடுத்தா பாசமுன்னு பார்க்காது

சொல்லத்தான் வார்த்தையின்றி தாய் மனசு நோகுமங்கே
சொல்லவே வாயுமின்றி ஓர் மனசு வாடுமிங்கே

சொல்லிலே வேலெடுத்து வீசுகின்ற சேயுமங்கே
மௌனத்தை பேசவிட்டா மாறிவிடும் யாவும் இங்கே

ரெண்டு கிளியிருக்கு ஒன்னு தனிச்சிருக்கு
பெத்த கிளி அதுக்கு எந்த துணையிருக்கு
ஊர்ல எங்கே நாட்டுல எங்கே காட்டுங்க எங்க தாய்ப்போல

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா

பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்க பெத்தவ
மனசு கல்லாச்சு இன்னொரு மனசு என்னாச்சு
அது முறிஞ்சுபோன வில்லாச்சு

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா…

Movie: Velaikkaran
Lyrics: Mu. Metha
Music: Ilaiyaraaja