Lyricist Pa.Vijay

ஒரு முகமோ இரு முகமோ பாடல் வரிகள்

ஒரு முகமோ இரு முகமோ முழுமுகமும்
கலவரமோ பயம் அறியாது இவன் தேசமோ…

இவன் விழிகள் குறி தானோ கண் அசைவில் கவர்வானோ
வலி அறியாது இவன் தேகமோ

ஒரு முகமோ இரு முகமோ முழுமுகமும்
கலவரமோ பயம் அறியாது இவன் தேசமோ…

இவன் விழிகள் குறி தானோ கண் அசைவில் கவர்வானோ
வலி அறியாது இவன் தேகமோ
ஓஹோ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ

நொடியில் நொடியில் முடிவெடுப்பான்
இடியின் மடியில் தினம் படுப்பான் அடியில் வெடியில்
உயிரெடுப்பான் நிழல் போல் இருப்பான்

எதிரும் புதிரும் போல் இருப்பான்
அதிரும் செயலில் பூப்பறிப்பான்
உதிரும் உயிரில் கணக்கெடுப்பான்
நெருப்பாய் நடப்பான்

உலகம் அதிகாலை சோம்பல் முறிக்கும்
ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும்

ஒரு சமயம் இவன் செயல் நியாயம்
மறு சமயம் இவன் செயல் மாயம்

ஒரு முகமோ இரு முகமோ முழுமுகமும்
கலவரமோ பயம் அறியாது இவன் தேசமோ

இவன் விழிகள் குறி தானோ கண் அசைவில் கவர்வானோ
வலி அறியாது இவன் தேகமோ..

தெறிக்கும் தெறிக்கும் இசை புடிக்கும்
சிரிக்கும் சிரிக்கும் மனம் புடிக்கும்
வெடிக்கும் வெடிக்கும் ஒளி பிடிக்கும் இரவின் தலைவன்

எதையும் செய்வான் உடனுக்குடன் தேநீர் விருந்து ஆபத்துடன்
செல்வான் வெல்வான் வேகத்துடன் இயங்கும் இளைஞன்

ரோஜாக்கள் தோற்கும் இவனின் முகமே
உள் சென்று பார்த்தால் உறுமும் குணமே

அட போனால் போகட்டும் என்பான்
தினம் பகையை உணவென உண்பான்

ஒரு முகமோ இரு முகமோ முழுமுகமும்
கலவரமோ பயம் அறியாது இவன் தேசமோ

இவன் விழிகள் குறி தானோ கண் அசைவில் கவர்வானோ
வலி அறியாது இவன் தேகமோ…

Movie: Bheemaa
Lyrics: Pa.Vijay
Music: Harris Jayaraj