Lyricist R.V. Udayakumar

ஊர் ஊரா போகும் பாடல் வரிகள்

ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு
ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு

உன்ன விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே
உன்ன விட்டு வேறெங்கும் போகாது
செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும்

உன்ன விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே
உன்ன விட்டு வேறெங்கும் போகாது

ஏதோ ஒரு மூலையிலே ஏங்கும் உசுரு
வீணாக என் ஒடம்ப தாங்கும் உசுரு
காரணம் கேளு அது பாடுது பேரு
தேர் ஒண்ணு காத்திருக்கு ஊர்வலத்துக்கு

உன்னுடன் தானா இல்லை நான் மட்டும் தானா
வேதம் கேட்கும் காதுக்குள்ளே ஏழை நாதம் கேட்காதா
மாதம் தேதி நாட்கள் எல்லாம் இன்று நியாயம் கூறாதா

காட்டுல வரையில ஆத்துல வயலுல நீதானே
அலையிற மனசுக்கு ஆறுதல் தருவது நீதானே நீதானே

ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு

தோளில் கருகாமணி விம்மி ஆடுது
தூங்காத கண்ணு மணி ஒன்ன தேடுது
நான் படும் பாடு அதை யார் அறிவாரோ
நாடோடிப் பாட்டு ஒண்ணு யாரத் தேடுது

நீ போகும் பாத அதத்தான் தேடுது
நீ இல்லாத ஊர் கொண்டாடும் நாளும் எனக்கு திருநாளா
காப்புக் கட்டி கரகம் ஆட அம்மன் அருளைத் தருவாளா

சேத்துல நான் நட நாத்துல தெரிவது நீதானே
காத்துல மழையில அனுதினம் தொடுவது நீதானே நீதானே…

ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு

உன்ன விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே
உன்ன விட்டு வேறெங்கும் போகாது
செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும்

உன்ன விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே
உன்ன விட்டு வேறெங்கும் போகாது

ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…

Movie: Kakkai Siraginilae
Lyrics: R.V. Udhaya Kumar
Music: Ilaiyaraaja